இறைவா காப்பாற்று..!

கீரிடம் தரித்த நச்சே!
மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் உருட்டி விடுவதென்ன!

ஆலகாலம் உண்டு ஆபத்பாந்தவனாய் அகிலம் காத்திட்ட…
தொண்டைக் குழியினில் நஞ்சை நிறுத்திய, நஞ்சுண்ட எம் சாமியே! யாவரையிம் காத்திடுவாய்

ஆலவாய் ஈசனே முக்கண்ணால் எரித்திடுவாய்! முழு உலகம் காத்திடுவாய் உடலற்ற அந்நச்சை உருத்தெரியமலே…..


முத்துக்குமார், ரயில்வே

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …