ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை குறித்து அடுத்த மாதம் தொடங்க உள்ள 70வது ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.

ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க இந்தியா பரிந்துரைத்துள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும் என்றும் ஐ.நா பொது சபையின் புதிய தலைவரிடம் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தினார். இன்று பிரதமர் மோடியை மோகென்ஸ் லிக்கேடோப்ட் சந்திக்க உள்ளார்

Check Also

குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக …