தமிழகத்தில் இதிலுமா மோசடி ?

 

உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகாக காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் இந்தியர்களைப் பரிசீலிக்காமல் வெளிநாட்டவர்க்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை அமைச்சக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

Check Also

வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் …