பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 16.05.2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் தலைமையில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்பு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ்மாத இதழின் முதன்மை ஆசிரியருமான MJF Ln Dr திரு. லி. பரமேஸ்வரன், TUJ வட சென்னை மாவட்ட பொருளாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. I கேசவன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செய்தியாளர் B. லட்சுமி நாராயணன் மற்றும் டி.யூ.ஜே. மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …