ரஜினியின் அடுத்த படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’

கோச்சடையான் படத்திற்குபிறகு ரஜினி நடிப்பாரா? என பல யூகங்கள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு ‘லிங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

[pullquote]

எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி.  இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் கைவிடப்பட்டது. [/pullquote]

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.

இந்தப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் இசையமைக்கிறார்,

வசனம், திரைக்கதை ‘சாருலதா’ படத்தை இயக்கிய பொன் குமரன் கவனிக்கிறார்.

ராக்லைன் வேங்கடேஷ் எனும் கன்னடத் தயாரிப்பாளர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

கோச்சடையான்’ படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினியின் பேரன், தனுஷ் – ஐஸ்வர்யாவின் இரண்டாவது மகன் பெயர் ‘லிங்கா’ என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *