களை கட்டிய விழா…

73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் பில்டர்&லேண்ட் டெவலபர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி இணைந்து வழங்கும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பெயர் பலகை திறப்பு விழா தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. S. எழில் சம்பத் அவர்கள் தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு. Ln. C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பார்குல உடையார் திருமண மண்டபத்தில் திரு. S. எழில் சம்பத் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக திரு. பொன்குமார் அவர்கள் ( முன்னாள நல வாரிய தலைவர்) திரு. Dr. விருகை. V.N. கண்ணன், ( INRBDMA, அகில இந்திய தலைவர்) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான நட்பின் மகுடம் திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான செயல் சிங்கம் திரு. Ln. C. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனை சேர்ந்த திரு. B. வெங்கடேசன், திரு. P.V. ஜெயகுமார், திரு. Ln.A.G. அசோக்குமார், திரு. K. சங்கர், திரு. B. லஷ்மி நாராயணன், திரு. Ln. L. வேலாயுதம், திருமதி. சித்ரா ஆனந்தன் மற்றும் மாநில, மாவட்ட இளைஞர், மகளிர் அணியினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். .

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …