பிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இந்தியா வந்த பில் கேட்ஸ், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே கழிவறை கட்டும் திட்டம் என்று தெரிவித்தார்.

பிரதமரை சந்திப்பதற்கு முன்பு அவர் அமைச்சர் நிதின் கட்கரி, அருன் ஜெட்லி யையும் சந்தித்துள்ளார்.

Check Also

நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

நைஜீரியாவில் ஒரு பள்ளியில் நேற்று தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *