அரசியல்

அனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …

மேலும் படிக்க

மின்வெட்டு பிரச்சனையில், தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது – டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், “முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, “நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்” என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், …

மேலும் படிக்க

எனக்கும் பெண் ஜர்னலிஸ்ட் அம்ரிதாவுக்கும் உள்ள தொடர்பு உண்மையே: காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் பழக்கமிருக்கிறது.அவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக இணையதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் …

மேலும் படிக்க

தாமரை சின்னத்துடன் பேட்டியளித்த மோடி மீது நடவடிக்கை- தேர்தல் ஆணையம் உத்தரவு

காந்திநகர்: ஏப்:30, 7வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நாடு முழுவதும் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் குஜராத்தின் 26 தொகுதிகளும் அடங்கும். குஜராத்தின் காந்திநகரில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடுகிறார். அங்கு தனது தாயாருடன் சென்று நரேந்திர மோடி இன்று காலை வாக்களித்தார். அதன் பின்னர் வாக்குச் சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் …

மேலும் படிக்க

வாக்களிக்க வரிசையில் நிற்காமல் சென்ற மத்திய அமைச்சர் சிரஞ்சீவி : தடுத்து நிறுத்திய வாலிபர்

மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தன் குடும்பத்தினருடன் வரிசையில் நிற்காமல் வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றதை வாக்காளர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தார் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி. ஆனால் அங்கு நீண்ட வரிசை நின்றது. சிறிது நேரம் வரிசையில் காத்திருந்த சிரஞ்சீவி. பின்னர் வரிசையில் இருந்து விலகிச் சென்று வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாக்காளர் …

மேலும் படிக்க

சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் மோடி: பிரியங்கா காந்தி

[pullquote] குழந்தைத்தனமாக பேசாமல், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நீங்கள், அந்த பதவிக்கான மதிப்பை அளிக்க வேண்டும்[/pullquote] அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதிரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பேசும்போது, “ராகுல் காந்தி எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். ராகுல் குறித்து அவர்கள், “இளவரசர்” என்றும் மற்றொரு சமயத்தில் ‘காமெடியன்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். …

மேலும் படிக்க

நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தனது மனைவியின் பெயரை மோடி அறிவிக்க காரணம் என்ன? என்று விசாரிக்கும் போது காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவினாலேயே மோடி தனது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் …

மேலும் படிக்க

அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

வாரணாசி: அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலம் தேர்தல் ஆணையத்தால் திடீரென சோதனை செய்யப்பட்டுள்ளது. ‘AAP ki Kranti என்ற பெயர் கொண்ட செய்தித்தாள்கள் 60 லட்சம் பிரதிகளை கேஜ்ரிவால் தனது சிவாஜிநகர், வாரணாசி கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளார் என்று பாஜக பிரமுகர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிரடியாக கேஜ்ரிவால் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால் அங்கு ஒரு லட்சத்து 92 …

மேலும் படிக்க

ராகுல் காந்தி, தலித் பற்றி கருத்து: பாபா ராம் தேவ் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் நடவடிக்கை …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு மே 19ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [pullquote]இவர்கள் இருவரும் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.[/pullquote] தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான …

மேலும் படிக்க