ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 மனிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஆவணித் திருவிழாவிற்கான …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம். இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …

மேலும் படிக்க

பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், …

மேலும் படிக்க

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க

பக்ரீத் விடுமுறை அக்டோபர் 6ம் தேதி: அரசாணையில் தகவல்

பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை …

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவம் : பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதாலும், முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளதாலும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க குறைந்தது 30 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக வந்தவர்கள் 20 மணி நேரம் வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசின சேவையும், ஆர்ஜித சேவை டிக்கெட்டும் ரத்து …

மேலும் படிக்க

குலசேகரப்பட்டணத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா புதன்கிழமை (செப்டம்பர் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக மிகப் பிரம்மாண்டமாக தசரா திருவிழா கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினத்தில்தான். பல லட்சம் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூலித்து அம்மனுக்கு செலுத்துவர். இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை …

மேலும் படிக்க

இன்று மகாளய அமாவாசை: ஆறுகள் மற்றும் கடலில் நீராடி முன்னோர்களை வழிபடும் மக்கள்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே ‘மகாளய அமாவாசை’ எனப்படுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய …

மேலும் படிக்க

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.25-இல் சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை: கடந்தாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. வரும் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு …

மேலும் படிக்க