இந்தியா

பெட்ரோல், டீசல் மேலும் விலை குறைய வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 நாட்களில் 5.19 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை சரிந்திருப்பதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விலை குறைப்பு அறிவிப்பை …

மேலும் படிக்க

கருப்பு பணம் விவகாரம்: 289 கணக்குகளில் பணம் காலி…

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில், உள்ள 289 கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அந்த கணக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு …

மேலும் படிக்க

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர …

மேலும் படிக்க

ஆதார் வழங்க தமிழ்நாட்டில் 469 நிரந்தர மையங்கள்

தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை …

மேலும் படிக்க

கருப்புப் பண பட்டியலில் சோனியா, ராகுல் பெயர்கள்: சுப்ரமணியசாமி குற்றச்சாட்டு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சோனியா, ராகுல் இருவரும் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.  கருப்புபண மீட்புக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோனியா, …

மேலும் படிக்க

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது: வரும் 31-ல் புதிய அரசு பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால …

மேலும் படிக்க

செய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …

மேலும் படிக்க

குறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI

ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில்  நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

குஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில், கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாட்டுக்கு வெளியே நிகழும் சர்வதேச சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க குடிமக்கள் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க நீதித்துறை …

மேலும் படிக்க