இந்தியா

பிரேதப் பரிசோதனை அறிக்கை திருத்தப்பட்டதா? சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவில் புதிய திருப்பம்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவு இயற்கையாக நடந்ததாக அறிக்கை தயாரிக்கும்படி பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் குழு தலைவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனந்தா புஷ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சில மாதங்களுக்கு முன்னர் …

மேலும் படிக்க

கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது:சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தனது …

மேலும் படிக்க

கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …

மேலும் படிக்க

பிஹாரில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி, 11 பேர் காயம்

தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் …

மேலும் படிக்க

80 கி மீ தூரம் வரை, புறநகர் ரயில் இரண்டாம் வகுப்பு கட்டண உயர்வு வாபஸ்

80 கி.மீ., தொலைவு வரையிலான புறநகர் ரயில் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, வாபஸ் பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இன்று ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 80 கி.மீ. தொலைவு வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர், புறநகர் அல்லாத அனைத்து ரயில்களுக்கும் 14.2 சதவீத கட்டண உயர்வை ரயில்வே அறிவித்திருந்தது. …

மேலும் படிக்க

நாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.

மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி …

மேலும் படிக்க

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல் இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈராக்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அந்நாட்டுக்குச் …

மேலும் படிக்க

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி

இந்திய கடற்படையின் மிகப் பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கோவா கடல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் போர்க்கப்பலில் வந்திறங்கினார். அவருக்கு, கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, விக்ரமாதித்யா போர்க் கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விவரித்தனர். மிக் 29 போர் விமானத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, இந்தியக் கடற்படையினரின் வலிமையை …

மேலும் படிக்க

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

உலக ரத்ததான தினம் உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு இல்லை – மத்திய அமைச்சர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார். தற்போதைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறியுள்ள அவர், மக்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 12-ஆக அதே நிலையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறித்து மத்திய அரசு தான் …

மேலும் படிக்க