செய்திகள்

ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது. பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க …

மேலும் படிக்க

முற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக …

மேலும் படிக்க

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்

இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு மானியம் ரத்தா? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும், …

மேலும் படிக்க

சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

மேலும் படிக்க

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அமரர் ஆர். ராஜேஸ்வரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவியின் இணை ஆசிரியர் திரு. லி. பரமேஸ்வரன் அவர்களின் தாயார் ஆர். ராஜேஸ்வரி அவர்கள் 21-11-2014 (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணியளவில் இயற்கை எய்தினார். அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அண்ணாரது இறுதிச் சடங்குகள் 22-11-2014, சனிக்கிழமை மாலை 2 மணியளவில் நெ. 148/127, ஆடம் தெரு, இராயபுரம், சென்னை – 13 என்ற …

மேலும் படிக்க

சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜாமின் மனு தள்ளுபடி

வட இந்திய மாநிலமான ஹரியானாவில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் இன்று வியாழனன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஒரு கொலை வழக்கில் பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சாமியார் ராம்பால் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். ஹரியாணாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான …

மேலும் படிக்க

சென்னை மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது. இந்த முதல் கட்டத்தில் சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா வரை இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். போரூரிலிருந்து வடபழனியை இணைக்கும் பாதையும் போடப்படும். முதல் கட்டத்தில் 20.68 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு என 3,267 கோடி ரூபாய் செலவாகும் என …

மேலும் படிக்க