செய்திகள்

இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கருணாநிதி பாராட்டு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு …

மேலும் படிக்க

குயின்ஸ்லாந்து பல்கலையில் பிரதமர் நரேந்திர மோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துச் சென்றார். பிரிஸ்பேன் விமான நிலையத்தை அடைந்த மோடி, ஒரு சில மணி நேரங்களில் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்தும், அவற்றின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார் மோடி. தேவையற்ற கழிவுகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும், …

மேலும் படிக்க

உலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது …

மேலும் படிக்க

ஐந்து மீனவர்களின் விடுதலைக்கு, இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றி: கருணாநிதி

ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து: இலங்கை

போதை பொருள் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதாக கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் …

மேலும் படிக்க

மாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பத்திரிகை தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை …

மேலும் படிக்க

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.

ஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார். பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் …

மேலும் படிக்க

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தலைவர்கள் என்ற பெயரில் அட்டகாசம்…

ராஜஸ்தான் மாநிலம் ராஹ்சமாந்த் மாவட்டத்தின் ஒரு பழங்குடி பகுதியில், ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்களின் உத்தரவின் பேரில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான அந்த பெண்ணுக்கு மொட்டையடிக்கப்பட்டு, அவரது முகத்தில் கரி பூசப்பட்டு பின் நிர்வாணப்படுத்தப்பட்டு அவரை கழுதை மீது ஏற்றி கிராமத்தில் ஊர்வலமாக சுற்றி வரும்படி செய்தாக புகார் எழுந்திருக்கிறது. தனது நெருங்கிய உறவினர் ஒருவரை …

மேலும் படிக்க

நடிகர் விஜய் வழங்கிய ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சென்னை சைதாப்பேட்டையில் டீ கடையில் வேலைபார்க்கும் எம்.ஷாகுல்ஹமீதுவின் மகள் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் 1,109 மதிப்பெண்கள் பெற்று, வறுமையின் காரணமாக என்ஜினீயரிங் படிப்பில் சேரமுடியாமல் கஷ்டப்பட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய், பாத்திமா என்ஜினீயரிங் படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார். இதற்கான கல்வி கட்டணத்தை மாணவியை நேரில் அழைத்து விஜய் வழங்கினார்

மேலும் படிக்க

​மத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை  பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க …

மேலும் படிக்க