ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …
மேலும் படிக்கமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது- உயர்நீதிமன்றம்
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் …
மேலும் படிக்கஐசிசி தலைவரானார் சீனிவாசன்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான …
மேலும் படிக்ககங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்
கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …
மேலும் படிக்கபிஹாரில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி, 11 பேர் காயம்
தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் …
மேலும் படிக்க80 கி மீ தூரம் வரை, புறநகர் ரயில் இரண்டாம் வகுப்பு கட்டண உயர்வு வாபஸ்
80 கி.மீ., தொலைவு வரையிலான புறநகர் ரயில் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, வாபஸ் பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இன்று ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 80 கி.மீ. தொலைவு வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர், புறநகர் அல்லாத அனைத்து ரயில்களுக்கும் 14.2 சதவீத கட்டண உயர்வை ரயில்வே அறிவித்திருந்தது. …
மேலும் படிக்கதந்தைக்கு லீவு அளிக்குமாறு 5 வயது சிறுமி கூகுள் நிறுவனத்திற்கு கடிதம்
புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள். “எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார …
மேலும் படிக்கதமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் டின் நிறுவனர், மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். 2ம் ஆண்டு நினைவஞ்சலி
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பில், நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத் திறப்பு, பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு பத்திரம் ஆகிய நிகழ்ச்சி, 22.6.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை கிண்டி, எம்.ஆர்.சி. ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழநாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா, மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்தார். …
மேலும் படிக்கபொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிறப்பு பேருந்துகள்
பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைகழகம் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து …
மேலும் படிக்கநாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.
மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி …
மேலும் படிக்க