முக்கியசெய்திகள்

ஆளுநர் ரோசையாவுடன் உள்துறைச் செயலாளர், டிஜிபி அவசர ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு வி்ட்டதால், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்று ஆளுநருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் அதிமுகவினர் …

மேலும் படிக்க

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து …

மேலும் படிக்க

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது நாட்டில் இதுவே …

மேலும் படிக்க

ஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

ஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை உடன் இருந்தவர்கள் தடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். Chennai: Self immolation attempt outside Jayalalithaa’s Residence #Jayaverdict pic.twitter.com/wkwuwjx6ZS — ANI (@ANI_news) September 27, 2014

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் பதட்டம் – அதிமுகவினர் கொந்தளிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். Chennai: AIADMK supporters protest outside Subramanian Swamy’s Residence #Jayaverdict pic.twitter.com/BtswiWQJrW — ANI (@ANI_news) September 27, 2014 பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக …

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொந்தளிப்பு: கருணாநிதி வீட்டின் மீது கல்வீச்சு – ANI News

கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசியதாக  ANI நியுஸ் தெரிவிக்கின்றது. மேலும் ஏராளமான அதிமுகவினர் கருணாநிதியின் வீட்டின் அருகே குவிந்துள்ளனர். அதிரப்படை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Chennai: #Jayaverdict Stone pelting at Karunanidhi’s residence,Reinforcement arrives pic.twitter.com/u1bavxcVJt — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict AIADMK Supporters gather outside Karunanidhi’s residence pic.twitter.com/lGpZqln1ZR — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict …

மேலும் படிக்க

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி.

18 வருடமாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி பரபரப்பு தீர்ப்பு , வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு. ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. இதைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். விரிவான தண்டனை விவரத்தை 3 …

மேலும் படிக்க

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …

மேலும் படிக்க

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. பிற்பகல் 1 மணிக்கு வழங்கப்படும்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் …

மேலும் படிக்க

அமெரிக்கா புறப்பட்டார் மோடி

ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …

மேலும் படிக்க