உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளார் 31,708 வாக்குகள் பெற்றார். பிற கட்சிகள் 1305 வாக்குகள் பெற்றுள்ளன. கோவை கோவையில், அதிமுக வேட்பாளர் கணபதி 1,13,180 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் 37,585 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் …
மேலும் படிக்கஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி: உயர் நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …
மேலும் படிக்கநான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: “சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய …
மேலும் படிக்கமங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு வட்டத்தை எட்டியது: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்
இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO’s Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் “மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி …
மேலும் படிக்கதிருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!
திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, அஞ்சலகங்களில் அஞ்சல்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், பல மக்கள் நலப்பணிகளும் தொடங்கி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. அதில், திருப்பதி தலைமை அஞ்சலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, சந்திரகிரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் உள்ள …
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் விமர்சனம்
Jail for Jayalalitha. Her to govern is like giving a garland of flowers to a monkey or asking a donkey to appreciate Kalpura incense aroma. — Subramanian Swamy (@Swamy39) September 20, 2014 தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் டிவிட் செய்துள்ளார் சுப்ரமணிய சுவாமி. தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறாக …
மேலும் படிக்கஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் …
மேலும் படிக்கஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது
தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் …
மேலும் படிக்கஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி அமெரிக்கர்?
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார். அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார். வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார். இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான …
மேலும் படிக்கபிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இந்தியா வந்த பில் கேட்ஸ், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே …
மேலும் படிக்க