விளையாட்டு

இந்து கடவுளை அவமதித்ததாக, டோனி க்கு கைது வாரண்டு ஆந்திர கோர்ட்டு பிறப்பித்தது

இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் டோனி க்கு ஆந்திர கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. பிஸினர் டுடே ஏப். 2013 இதழின் அட்டையில் வெளியான புகைப்படத்தை வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்துக் கடவுள் விஷ்ணு போல் வரையப்பட்டிருந்த படத்தில் தோனி படத்துடன் ‘காட் ஆஃப் பிக் டீல்” என்ற தலைப்பிட்டு வெளியானது. அதில் ஒரு கையில் ஒரு நிறுவனத்தில் ஷூவை தோனி …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை பந்தாடியது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டம் தொடங்கிய  17வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். 26-வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார்  கோல் …

மேலும் படிக்க

ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டார்

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். மேலும் அவரது ஆரோக்கியம் சீரடைய மறுவாழ்வு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்சில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் ஷூமாக்கருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு இரவும் பகலும் அயராது சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களுக்கும் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: உலகச் சாம்பியன் ஸ்பெயின் படுதோல்வி

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது. ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி சால்வடோர் நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் போது அவ்வப்போது மழையும் பெய்தது. இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்ஃபோன்ஸோ பெனால்டி முறையில் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது. போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் …

மேலும் படிக்க

நேய்மர் பெனால்டி கிக் – அது கூடைப்பந்தாட்டத்தில்தான், குரேஷிய மேலாளர்

உலகக் கோப்பைக் கால்பந்து முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய பெனால்டி கிக் கொடுத்த ஜப்பானிய நடுவர் மீது குரேஷிய அணி மேலாளர் நிகோ கோவக் கடும் விமர்சனம் செய்தார் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் குரேஷிய வீரர் லவ்ரென், பிரேசில் வீரர் ஃபிரெட் என்பவரை முறை தவறித் தடுத்ததாக ஜப்பானிய நடுவர் நிஷிமோரா பிரேசில் சார்பாக பெனால்டி கிக் கொடுத்தார். நெய்மர் அதனை கோலாக மாற்றியது பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. நடுவரின் …

மேலும் படிக்க

கால்பந்து: நெய்மாரின் இரட்டை கோல்களால் முதல் ஆட்டத்தில் பிரேசில் வெற்றி!

சா பாலோ நகரில் உள்ள கொரிந்தியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரை பிரேசில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நட்சத்திர வீரர் நெய்மர் இரண்டு கோல்கள் அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84,000 கோடி செலவழித்துள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

மேலும் படிக்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 9 ஆவது முறையாக வென்று நடால் சாதனை

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நடால், செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார். ஒன்பது முறை இப்போட்டியை வென்றது மட்டுமன்றி, அதை தொடர்ச்சியாக ஐந்து முறையும் வென்று ரஃபேல் நடால் புதியதோர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆறு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் …

மேலும் படிக்க

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: முத்கல் குழு விசாரணைக்கு பிசிசிஐ எதிர்ப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஐ.பி.எல் சூதாட்டப் புகாரை எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முத்கல் குழு, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, ஐபிஎல் போட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விசாரிக்க புதிய குழு அமைப்பது தொடர்பான விசாரணை முடிந்து, …

மேலும் படிக்க