இந்தியா

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 …

மேலும் படிக்க

தாய்ப்பாலின் மகத்துவம். இளம் தாயை காப்பாற்றிய நர்ஸ்…

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 17-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் 22 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு திடீரென தாய்க்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்த போக்கை நிறுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தயாராகியுள்ளனர். இந்தநிலையில் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த …

மேலும் படிக்க

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தைரியத்துடனும், உறுதியுடனும் நாட்டிற்காக வீரர்கள் உழைத்து வரும், விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் வான்வழியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் முன்னின்று செயல்படுவதாக மோடி பெருமை கூறியுள்ளார். I salute our air force personnel on Air Force Day. They have always …

மேலும் படிக்க

லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது …

மேலும் படிக்க

முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான  அமிதாப் தாக்குருக்கும் மாநில அரசுக்கும்  இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய அமிதாப் தாக்கூர், தனக்கும் முலாயம் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ ஒன்றை வெளியிட்டு …

மேலும் படிக்க

தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் …

மேலும் படிக்க

ஈரான் படத்திற்கு இசையமைத்தற்கு பத்வா: ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை …

மேலும் படிக்க

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …

மேலும் படிக்க

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …

மேலும் படிக்க