அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் தரைக் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

Check Also

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *