லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா

லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா

ஜனநாயக நாடு என்றாலே அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்களாட்சி முறையில் அவர்கள் மூலம் அந்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை, தேவைகளை பெற்றுத் தருகிறது.

அதுபோல பல்வேறு துறைகளில் பணியாற்றும் மக்கள் ஒன்றினைந்து ஒரு அமைப்பின் மூலம் இத்தகைய பணி செய்கிறார்கள் என்றால் அது வியக்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம் ஹெரிடேஜ் அமைப்பின் 2014 -2015 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா சென்னை குவாலிட்டி இன் சபாரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் தலைவராக லயன் அகில் மணி, செயலாளராக லயன் லி. பரமேஸ்வரன், பொருளாளராக லயன் என். சரவணன் ஆகியோரை PMJF. Lion. D. சாய் வேணுகோபால் (First Vice Dist. Governor Elect) அவர்கள் அறிமுகம் செய்த இந்த விழாவில் வருங்காலங்களில் வேகமான, விவேகமான சமூகத்திற்கு பயன்பெறும் பணிகளை செய்ய விருப்பதாக பதவியேற்றுக் கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து PMJF. Lion. C.C. ஜான் (Second Vice Dist. Governor Elect) அவர்கள் அரிமா சங்கத்தில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனி வரும் ஆண்டில் எவ்வாறு செயல்பட வேண்டும் என எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில், லயன். T. ராமச்சந்திரன் (Administrative Committee Chairman), லயன் C. பாலகிருஷ்ணன் (Activities Committee Chairman), லயன். R. விஜயகுமார் (Cabinet Secretary Designate) ஆகியோர் முன்னிலை வகிக்க, கடந்த ஆண்டின் (2013 – 2014) நிர்வாகிகளான லயன் D. சண்முகநாதன், தலைவர், லயன் K. வேலுமணி, செயலாளர், லயன் G. தேவராஜன், பொருளாளர் ஆகியோருடன் ஏராளமான அரிமா நண்பர்களுடன் PPFA நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *