Tag Archives: அரசியல்

சமத்துவ மக்கள் கட்சி – அதிமுக கூட்டணி தொடரும்: சரத்குமார்

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்

இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற என்ற இளங்கோவன் தரப்பு வேண்டுகோளை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். காவல்துறை இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வரும் போது இளங்கோவனுடன் 2 …

மேலும் படிக்க

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது, கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல்   தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார். கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக …

மேலும் படிக்க

ரக்சா பந்தனுக்கு பரிசு வெங்காயம்!

வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெங்காயத்தை பொதுமக்களுக்கு பரிசளித்து அத்யாவசி பொருட்களின் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்க

வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும்: டாக்டர் ராமதாஸ்

வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்த விவரம்:  சென்னை, காமராஜர் அரங்கத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் வளர்மதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி ஜி.நாராயணன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.  இந்தப் புகாரின் அடிப்படையில், …

மேலும் படிக்க

ராமஜெயம் கொலை வழக்கு: இருவரிடம் உண்மை கண்டறியும் சோதனை

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 2 பேரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சி – கல்லணை சாலையில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2012 ஜூன் 27ம் தேதி, சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. ஆனால், …

மேலும் படிக்க

சன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது

சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கப் பிரிவு பிறப்பித்த உத்தரவின் படி தங்களுக்கு எதிராக வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதை முன் கூட்டியே தவிர்க்கும் வகையில் மாறன் சகோதரர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், …

மேலும் படிக்க

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்குகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க