Tag Archives: தேர்தல்

வாக்களிப்பதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வாக்களிப்பதற்காக வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அலுவல் நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளன. …

மேலும் படிக்க

144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் …

மேலும் படிக்க

தமிழகத்தின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல, டாடி தான் காரணம்: ஸ்டாலின்

[pullquote]தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.[/pullquote] புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தின் போது தமிழக வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி தான் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் நேற்றைய கருத்து குறித்து விமர்சித்த ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது டாடி தான் காரணம் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் தாம் கண்டது திமுகவிற்கு …

மேலும் படிக்க

நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : ஜெயலலிதா

அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி …

மேலும் படிக்க

குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை – முலாயம்சிங் யாதவ்

குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மிகவும் விலையுயர்ந்த உரங்கள் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியில் பரப்புரை செய்த அவர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் முலாயம்சிங் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் முஸ்லீம், கிறிஸ்டியன் போன்ற …

மேலும் படிக்க

நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் தேர்தல் கருத்துக் கணிப்பு

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு: அதிமுக -15,  திமுக அணி- 14, பா.ஜ.க. அணி 10  திமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் சிதம்பரம் புதிய தமிழகம்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் தென்காசி அதிமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், …

மேலும் படிக்க

பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீர்கள்: பாஜக மூத்த தலைவர்களக்கு மோடி வேண்டுகோள்

பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட கருத்துக்கள் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என்று கூறி தேவையில்லாத பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை …

மேலும் படிக்க

தேர்தலை பொதுமக்கள் நேரடியாக இணையதளம் மூலம் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை   உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684  சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான …

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை …

மேலும் படிக்க

தமிழக காங்கிரஸ் களமிறக்கிய நட்சத்திரம் நடிகை மும்தாஜ்!

தமிழக காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்காக தமது பிரசார பீரங்கியாக நடிகை மும்தாஜை களம் இறக்கியுள்ளது, அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மும்தாஜ் பேசுகையில், “நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைப்பதற்காக அங்கிருந்து பிளேன் பிடித்து வந்துள்ளார். அதனால்தான் ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்” என்றார். காங்கிரஸ் …

மேலும் படிக்க