காசநோயால் உலகில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு-ஆய்வறிக்கை

பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிப்பதாக கூறுகிறது.

முன்னதாக அறியப்பட்ட எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

காச நோய் குழந்தைகளிடம் மிக விரைவாக உருவாவதால், மேலும் திறனுள்ள கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துவது சிகிச்சையின் பலன்களை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் காச நோயால் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

Check Also

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்

உலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *