தங்கக் கொள்ளை..! ஆதங்கம்.

நண்பர் ஒருவரின் ஆதங்கம்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தை திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்கு சொந்தமானது… என்று உரிமைக் குரல் எழுப்ப, வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதார பணத்தை தள்ளுபடி செய்ததாம்.

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பிரபல பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக் கூடாது என முழங்கி அவரும் காரியத்தை சாதித்துக் கொண்டாராம். (அடுத்தவன் எப்படி போனா நமக்கென்ன)

சேதாரம் என்ற பெயரில் தங்க நகைக் கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர்கள் யாரும் ஏன் கண்டுகொள்வதே இல்லை? 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ. 48,000 என்றால் கடை முதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் ரூ. 9,000 தண்டமாக அழ வேண்டும். ஏறக்குறைய
16 சதவிகிதம்…? (தலை சுற்றுகிறதா?) எதற்காக இந்த தண்டம்…? 16 கிராமுக்கு 3 கிராம் எப்படி சேதாரமாகும்…? யாராவது கேள்வி கேட்டதுண்டா?

அப்படி யாராவது புத்திசாலித்தனமாக தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் இவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள் போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து கூல் செய்வார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தை சட்டபூர்வமாகவே கடைபிடிக்கிறார்கள். அதாவது எந்த பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது, சில கடைகளில் மிக குறைந்த சேதாரம் என்று நட்சத்திரங்களின் விளம்பரம் வேறு? (போராட்டம்… இலட்சிய போராட்டம்………)

நமது கேள்வி என்னவெனில்!

* ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா…?

* பொருளுக்கு உண்டான உண்மை விலையை மட்டுந்தானே வாங்க வேண்டும்…?

* 16 கிராமில் நகை செய்ய 3 கிராமா சேதாரம்?

* இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டுகொள்வதில்லை…?

* ஏன் நகை கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை…?

எத்தனை , எத்தனை ஏழை மக்கள், குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள். ஒரு மனசாட்சி வேண்டாமா… பின்னர் ஏன் நாட்டில் ஏழை, ஏழையாகவே இருக்க மாட்டான்.

ஒரு நகைக்கடை வைத்தவன் ஊர் எல்லாம் நகைக்கடை திறக்க மாட்டான்.

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில், அவர்களை சுரண்டித்தான் ஒருவன் வசதி படைத்தவனாகிறான்.

இது போன்ற பகல் கொள்ளைகாரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்பட வேண்டும். இது எப்பொழுது நிகழும்?

பதில் உங்களிடம்தான்…..

என்.சீனிவாசன்

Check Also

ஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது

தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *