அரசியல்

பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறை திறப்பு…

சென்னை யானைக்கவுனி, மண்டலம். 5, வார்டு 54 பகுதி 13 ல், உட்வார்ப்பு, முதல் கேட்டில், 2020-2021 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறையினை, துறைமுகம் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு முன்னிலை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் …

மேலும் படிக்க

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊரட‌ங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலை, ரெயினி மருத்துவமனை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (500 நபர்களுக்கு) நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்களது ஆணைக்கிணங்க, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வட சென்னை கிழக்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பாக மதுபான கடைகளை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து, 13.06.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், …

மேலும் படிக்க

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி …

மேலும் படிக்க

மக்களின் ஆட்சி என்பது இதுதானோ!

கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டி பகுதியை சார்ந்த ஒரு பெண்மணி தங்களுக்கு ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்றும் அரசின் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவை பார்த்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் அனுப்பிய பதிலில், உடனடியாக எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைத்தளம் மூலமாக அப்பெண்ணிற்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் நேரடியாக …

மேலும் படிக்க

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இராயபுரம் பகுதியில் 52 ஆம் வட்டம், வேலாயுத பாண்டியன் தெரு பகுதி வாழ் மக்களுக்கு “கபசரகுடிநீர் ” (சுமார் 200 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. …

மேலும் படிக்க

திமுக எம்எல்ஏ க்களுக்கு வாழ்த்து….

தமிழக சட்டமன்ற தேர்தலில் (2021), திராவிட முன்னேற்ற கழகம், திருவொற்றியூர் தொகுதியில் மகத்தான வெற்றியினை குவித்த திரு கே.பி.சங்கர் அவர்களையும், ஆர்.கே.நகர் தொகுதியில் சாதனை வெற்றியாளர் திரு. J.J.எபினேசர் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழகம் 7 வது  வட்ட இளைஞரணியை சேர்ந்த திரு. டேனியல் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் படிக்க

டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  ” நோட்டாவை தவிர்ப்போம்”  “100  சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்”  என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. …

மேலும் படிக்க

படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம்  N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார். தொடர்ந்து நம்மிடம் …

மேலும் படிக்க

பிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் திருமதி குஷ்பு சுந்தர், திரு.ஜான்பாண்டியன், திரு. ஆதிராஜன் ஆகியோரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் “இரண்டாம் சாணக்கியர்” திரு. அமித்ஷா அவர்கள் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வருகைத் தந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் …

மேலும் படிக்க