செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் …

மேலும் படிக்க

தமிழகத்தில் இதிலுமா மோசடி ?

  உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்

இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம். செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், ஆசிரியர், பி. வெங்கடேசன் இணை ஆசிரியர், லி. பரமேஸ்வரன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.  

மேலும் படிக்க

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்றது. தனது சீக்கட்டி ராஜ்யம் தெலுங்கு திரைப்படத்தின் முன்திரையிடல் காட்சியை விஜயவாடாவில் நடத்த அனுமதி கோரியும், அப்படத்தை காண வருமாறு அழைப்பு விடுக்கவும் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது அழைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டதாகவும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், …

மேலும் படிக்க

தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கோவை காய்கறி சந்தையில் வழக்கமாக விற்கப்படும் விலையிலிருந்து 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், கோவை காய்கறி சந்தையில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென என உயர்ந்துள்ளது.  மழை காரணமாக ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் …

மேலும் படிக்க

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தைரியத்துடனும், உறுதியுடனும் நாட்டிற்காக வீரர்கள் உழைத்து வரும், விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் வான்வழியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் முன்னின்று செயல்படுவதாக மோடி பெருமை கூறியுள்ளார். I salute our air force personnel on Air Force Day. They have always …

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை …

மேலும் படிக்க

லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது …

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம‌ நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை.  சென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது …

மேலும் படிக்க

சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …

மேலும் படிக்க