மருத்துவம்

கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …

மேலும் படிக்க

சென்னையில் வேகமாக பரவும் சின்னம்மை நோய்

சென்னையில் சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்னம்மை நோய் பரவி வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

மேலும் படிக்க

காசநோயால் உலகில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு-ஆய்வறிக்கை

பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிப்பதாக கூறுகிறது. முன்னதாக அறியப்பட்ட எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும். உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல …

மேலும் படிக்க

சென்னையில் (மெட்ராஸ் ஐ) கண் நோய் பரவுகிறது

வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது.  இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது. கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. …

மேலும் படிக்க

அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பும், பக்கவாதம் அதிகம் -ஆய்வறிக்கை

ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு கடுங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த …

மேலும் படிக்க

உயர் சிகிச்சைபெற சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, இன்னும் ஒரு சில வாரங்களில் நாட்களில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பார் எனத் தகவல்

சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால் புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு அதனை ஏழை–எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். உயர் சிகிச்சை பெறமுடியாமல் உயிர் இழக்கும் ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் …

மேலும் படிக்க

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ் மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை படைத்துள்ளார். இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஷ் மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ …

மேலும் படிக்க

ஆஞ்சியோகிராம் & ஆஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன்

ஆன்ஞ்சியோகிராம் & ஆன்ஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன். இதயம் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களை இந்த விடீயோ மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்ஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை. ஆன்ஞ்சியோபிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது? ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, …

மேலும் படிக்க

ஆஞ்சியோகிராம் – இதயத்தில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடித்தல்

கொரனரி ஆஞ்சியோகிராம் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த “எக்ஸ் ரே’ தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்புகள் உள்ளன, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் …

மேலும் படிக்க