முக்கியசெய்திகள்

வேலூர்,பேர்ணாம்பட்டில் கல்வெட்டு அடிக்கல்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகம்.3 வார்டு எம்ஜிஆர் நகரில்கல்வெட்டு அமைக்கும் பணியை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் திருமதி பிரேமாவெற்றிவேல் நகர கழகச் செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் திரு ஆலியார்ஜூபேர்அஹமத் நகராட்சி ஆணையர் திரு வேலவன் நகர மன்ற உறுப்பினர்கள் நாகஜோதிபாபு ஜானகி பீட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்

மேலும் படிக்க

அமைச்சர் அறிவுரை மின்துறை பணியாளர்களுக்கு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் செல்போன்களை தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்

மேலும் படிக்க

எச்சரிக்கும் சென்னை போக்குவரத்து போலீசார்

சென்னையில் வேகமாக போனால் முதல் முறை மட்டும் தான் 1000 ரூபாய் அபராதம்.. அடுத்து 3,000 ரூபாய்…லைசென்ஸ் கேன்சல் ஆகும்.. வாகனவோட்டிகளை கடுமையாக எச்சரிக்கும் போக்குவரத்து போலீசார்..

மேலும் படிக்க

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக சேவகரும், – தொழிலதிபரும், மனித நேயருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA., அவர்களுக்கு இன்று 04.11.2023,  பிறந்த நாள். இதனையொட்டி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” …

மேலும் படிக்க

மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 8 ரெயில்களும், நாளை 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு …

மேலும் படிக்க

வாகன வரி ஏற்றம்

இரு சக்கர வாகனங்களுக்கு இதுவரை எட்டு சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இனி ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதமும், ஒரு லட்சம் மேல் உள்ள வாகனங்களுக்கு பன்னிரண்டு சதவீதம் வரி வசூலிக்கப்படும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்த வரி உயர்வு இம் மாதமே அதாவது வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அமுலுக்கு வரும் என …

மேலும் படிக்க

கண்டெய்னர் லாரிகள் ஓடாது

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வரும் 6 ந் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் இயக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது பற்றி மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கண்டெய்னர் டேங்கர் லாரிக்களுக்கான நாற்பது சதவீத காலாண்டு உயர்வை ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க

எகிறிடும் வணிக சிலிண்டரின் விலை

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 புதன்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது  ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (நவ.1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி ரூ.101.50 …

மேலும் படிக்க

வேகத்துக்கு தடை. நவம்பர் 4 முதல்அமலுக்கு வருகிறது

வாகனங்களின் வேக வரம்பு – சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே …

மேலும் படிக்க

வேலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோத முகாம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா கிரீன் வேலி மெட்ரிக் பள்ளி புதிய பேருந்து நிலையம் பின்புறம் இன்று வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிரீன் வேல்யூ கல்வி அறக்கட்டளை மற்றும் மட்றப்பள்ளிநல்ல சமாரியான் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தும் திரு ஜாவித்கான் திருமதி ஆயிஷாஜாவித்கான் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக இம்முகாம்நடைபெற்றது …

மேலும் படிக்க