முக்கியசெய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இன்மர்சாட் செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை …

மேலும் படிக்க

சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி,காங்கிரஸ் தொண்டர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி என்பதற்கான பயிற்சி திருச்சியில் நேற்று (23.03.2014) நடைபெற்றதாக அறிவித்துள்ளது. இதில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 26 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்: சௌதியில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

சௌதி அரேபியாவில் இருக்கின்ற இந்தியக் குடிமக்களை அங்கே வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்திருக்கிறது. அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் சௌதி அரேபிய நிர்வாகத்தால் கைதுசெய்யப்படுகின்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சௌதி தலைநகர் ரியாத்தில் மருத்துவமனைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் பெண்கள் சிலர், கடந்த ஒன்பது மாத காலமாக தனக்கு சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி …

மேலும் படிக்க

காசநோயால் உலகில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு-ஆய்வறிக்கை

பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிப்பதாக கூறுகிறது. முன்னதாக அறியப்பட்ட எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும். உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத் தேடுதல் வேட்டை: பல புதிய பொருட்களை சீன விமானம் கண்டது

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்தப் …

மேலும் படிக்க

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பான விசாரணையில் …

மேலும் படிக்க

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் 2006 ம் ஆண்டு ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை முறித்துக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் …

மேலும் படிக்க

பவர் ஸ்டார் எங்கள் மீது பவரை காட்டுகிறார்: குடியிருப்பு சங்கத்தினர்!

மதுரவாயல் அருகே உள்ள வானகரத்தில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் …

மேலும் படிக்க

மலேசிய விமானம்: இந்தியப் பெருங்கடலின் தெற்கே மிதப்பவை காணாமல்போன விமானத்தின் பாகங்களா?

காணாமல் போன மலேசிய விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான பாகங்களைத் தேடிவருகின்றனர். இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு …

மேலும் படிக்க