Tag Archives: மருத்துவம்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சில ஆலோசனைகள்!

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்: *எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும். *நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், …

மேலும் படிக்க

நலமுடன் வாழ சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை

நலமுடன் வாழ நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். உலக சுகாதர நிறுவனமும், பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்றைய நிலையில் ஒருவரின் …

மேலும் படிக்க

எபோலா வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு? கனடா விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலகையை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தடுப்பு மருந்து இல்லாமல் இருக்கிறது என்ற கவலையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் போக்கி இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்த வைரஸ் கொல்லி மருந்து குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை வெற்றி அடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகி உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்தி வருவது எபொலா வைரஸ். கனடாவின் பொது சுகாதார ஏஜென்சியை சேர்ந்த ஆய்வு …

மேலும் படிக்க

உலகின் முதல் தடவை முழுமையான உடல் உறுப்பு வளர்த்து ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தகைய முயற்சி வெற்றி பெறுவது உலக அளவில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் தைமஸ் என்று அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் …

மேலும் படிக்க

எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவை! உலக சுகா­தார அமைப்பு தகவல்

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் பரவி வரும் எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவைப்­ப­டு­மென உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது. எதிர்­பார்த்­ததை விட வேக­மாக வைரஸ் பரவி வரு­வ­தா­கவும் உலக சுகா­தார அமைப்பின் துணை இயக்­குநர் கெய்ஜி புகுடா எச்­ச­ரித்­துள்ளார். இத­னி­டையே சிய­ரோ­லி­யோனில், எபோலா வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மருத்­து­வ­ ம­னை க்கு கொண்டு செல்­லாமல் பாது­காப்­ப­வர்­க­ளுக்கு இரண்டு ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­மென அந்­நாட்டு அரசு அறி­வித்­துள்­ளது. கினி, …

மேலும் படிக்க

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்: * கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Premenstrual syndrome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். * உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும். * PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்றுபடும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு …

மேலும் படிக்க

அவசர நேரத்தில் உங்களை காப்பாற்றும் மொபைல் ICE (In Case of Emergency) எண்.

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் …

மேலும் படிக்க

கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …

மேலும் படிக்க

இந்தியாவில் உயிர்களைக் காப்பாற்ற பயன்படும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்: “உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன. மார்ச் மாதம் வரை வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக …

மேலும் படிக்க

சென்னையில் வேகமாக பரவும் சின்னம்மை நோய்

சென்னையில் சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்னம்மை நோய் பரவி வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

மேலும் படிக்க