Tag Archives: அரசியல்

ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …

மேலும் படிக்க

புதிய கட்சியின் கொடி நாளை அறிமுகம்: ஜி.கே.வாசன்

புதிய கட்சியின் கொடி சென்னையில் நாளை வெளியிடப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே கட்சிக்கு வைக்க வேண்டும் என பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க

சார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …

மேலும் படிக்க

இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கருணாநிதி பாராட்டு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு …

மேலும் படிக்க

‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று  ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …

மேலும் படிக்க

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.

ஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார். பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் …

மேலும் படிக்க

ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு

திருச்சியில் இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமது புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியுள்ளார். புதுக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அணியிலும் உள்ள தனது …

மேலும் படிக்க

ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. …

மேலும் படிக்க

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இந்த வார இறுதியில் மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம், 7 பெண்கள் அடங்கலாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஆறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய இரண்டு பொறுப்புக்களான …

மேலும் படிக்க