Tag Archives: மலேசியன் ஏர்லைன்ஸ்

இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா?

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ஆவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனவேதான் …

மேலும் படிக்க

MH17 மலேசிய விமான பயணியின் ஃபேஸ்புக் ‘ஜோக்’ நிஜமான சோகம்

கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் “ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்” எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் …

மேலும் படிக்க

மலேசிய விமானம் எரியும் வீடியோ:

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ஏவுகணையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ஏவுகனையால் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற …

மேலும் படிக்க

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டனர் என்று உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு போயிங் 777 விமானம் சென்று …

மேலும் படிக்க

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட்டுகிறது: ஆஸ்த்ரேலிய பிரதமர்

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட். [pullquote]அந்த மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா உத்தேசமாக 60 மில்லியன் டாலர்களை செலவழிக்கும் என்றாலும், மற்ற நாடுகளிடமிருந்தும் நன்கொடைகளை கோரும் எனவும் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.[/pullquote] அந்த விமானத்தின் பகுதிகள் இனியும் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் …

மேலும் படிக்க

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானப் பயணிகளின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முடிவு?

மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் தேடுதல் சில வருடங்களாவது எடுக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த விமானத்தின் காணாமற் போன பெரும்பான்மை சீனப் பயணிகளின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமக்கு உறுதியான பதில் தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சீனாவின் பீஜிங்கில் MH370 பயணித்த தமது குடும்பத்தினர் குறித்த தகவலுக்காக ஹோட்டலில் காத்திருந்த …

மேலும் படிக்க

பெங்களூருக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கம் – லேண்டிங் கியர் பிரச்சனை

மலேசியன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில், எமர்ஜென்சி லேன்டிங் செய்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் வலது லேன்டிங் கியர் இயங்காத நிலையில், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து இறங்கியுள்ளது. இன்று அதிகாலை எமர்ஜென்சி லேன்டிங் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் MH192 விமானம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.09-க்கு புறப்பட்டது. பெங்களூரு செல்லவேண்டிய …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் முதல் தேடலில் எந்த தகவலும் இல்லை

இந்துமகா சமுத்திரத்தில் தனது முதல் தேடல் நடவடிக்கையின் போது, சிறிய ஆளில்லா நீர்மூழ்கியால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க கடற்படையின் காப்டன் ஒருவர்  கூறியுள்ளார். தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான் அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் …

மேலும் படிக்க

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பரப்பு குறைந்துள்ளது: ஆஸ்திரேலியன் பிரதமர் டோனி அப்பாட்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக, சீனாவில் வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நேரத்தில் செய்தியாளர்களிடம் திரு.அப்பாட் கூறினார். இந்த விமானத்தின் பாகங்களை இப்போது மொத்தம் 47 ஆயிரம் சதுர …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கடலுக்கடியில் இருந்து வரும் சிக்னல் கேட்டது

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று, விமான கருப்பு பெட்டி எழுப்பும் ஒருவிதமான சிக்னலை கடலுக்கடியிலிருந்து கேட்டுள்ளதாக தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார். ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து …

மேலும் படிக்க