அஜித் படத்தலைப்பு “என்னை அறிந்தால்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் தலைப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தான் படத்தின் தலைப்பு 30 அக்டோபர் அன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. அதன்படி அஜித் படைத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 “என்னை அறிந்தால்” என்பது தான் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு. இந்தப் படத்தில் அஜித்துடன் அனுஷ்காவும், திரிஷாவும் நடிக்கின்றனர். மற்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அருண் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களுமே ஹிட் என்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ennai-ari-3

இசை வெளியீடு எப்பொழுது என்பது தான் அஜித் ரசிகர்களின் அடுத்த கேள்வி. அஜித்தின் வெற்றிப் படமான ஆரம்பம் படத்தின் தலைப்பை கூட, படம் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான பிறகே அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *