சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி மேயர் சுஜாதா தொடங்கி வைப்பு!!

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட 30, 34 வது வார்டுகளில் உள்ள தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்க நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ 1 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சைதாப்பேட்டை கானாறு தெருவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …