வேலூர், பேர்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் காயம். பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செரு கிராமத்தில் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் ஏற்றி வந்த ஆட்டோ நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது.

இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …