இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின், உயர்மட்ட அதிகாரக் குழுவிலிருந்து மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய குழு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்கள் என்று கருதப்படும் அத்வானி, ஜோஷி ஆகியோர் இனி கட்சியின் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்று கட்சியின் அறிவிப்பு கூறுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட அதிகாரக் குழுவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறாதது இதுவே முதல் முறை.
அத்வானி, ஜோஷி ஆகியோர் அதிகாரமற்ற பொறுப்பில் மாற்றப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது. மேலும் இவர்களின் அரசியல் அதிகாரத்தில் ஓரங்கட்டப்படுவதையே இது காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி