Tag Archives: பாஜக

ஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார். இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி …

மேலும் படிக்க

இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மாறாக ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். குஜராத்தின் ராஜ்கோட் அருகே ஜஸ்டான் மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் கடந்த வருடம் …

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது: வரும் 31-ல் புதிய அரசு பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால …

மேலும் படிக்க

பாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்குமா? பாஜக அவசர ஆலோசனை

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளிடையேயான கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்து இரு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா இன்று மும்பையில் சிவசேனா தலைவர்களுடன் நடத்துவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 15 ஆம தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று  அமித்ஷா எதிர்பாக்கிறார். ஆனால் சிக்கல் தீரும் …

மேலும் படிக்க

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, …

மேலும் படிக்க

அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

வாரணாசி: அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலம் தேர்தல் ஆணையத்தால் திடீரென சோதனை செய்யப்பட்டுள்ளது. ‘AAP ki Kranti என்ற பெயர் கொண்ட செய்தித்தாள்கள் 60 லட்சம் பிரதிகளை கேஜ்ரிவால் தனது சிவாஜிநகர், வாரணாசி கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளார் என்று பாஜக பிரமுகர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிரடியாக கேஜ்ரிவால் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால் அங்கு ஒரு லட்சத்து 92 …

மேலும் படிக்க

சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்தார். அதற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் அவர்களை கட்டுப்படுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்’ என்று அவர் பதிலளித்தார். மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர …

மேலும் படிக்க

பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீர்கள்: பாஜக மூத்த தலைவர்களக்கு மோடி வேண்டுகோள்

பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட கருத்துக்கள் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என்று கூறி தேவையில்லாத பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை …

மேலும் படிக்க

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி

நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பும னுவை தாக்கல் செய்த போது கட்சியின் கடிதத்தை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் இணைக்கவில்லை. இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் …

மேலும் படிக்க