ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், அரையிறுதிக்கு, இந்திய வீரர்கள் ஷிவ் தாப்பா, தேவேந்திரோ சிங், விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு, மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 56 கிலோ எடைப் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷிவ் தாப்பா, கிர்கிஸ்தானின் வீரரை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டாவது சுற்றில் கிர்கிஸ்தான் வீரருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் விலகினார். இதனால் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஷிவ் தாப்பா வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி