Tag Archives: விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா முதலிடம்

சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்தில் உள்ளார். உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி, 125வது இடத்தை பிடித்துள்ளார். சோம்தேவ் 12 இடங்கள் பின்தங்கி 164வது இடத்தை பெற்றுள்ளார். சகெத் மைனெனி 195வது இடத்திலும், ராம்குமார் …

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 3 பதக்கங்கள் உறுதி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், அரையிறுதிக்கு, இந்திய வீரர்கள் ஷிவ் தாப்பா, தேவேந்திரோ சிங், விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு, மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 56 கிலோ எடைப் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷிவ் தாப்பா,  கிர்கிஸ்தானின் வீரரை எதிர்த்து …

மேலும் படிக்க

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள்  வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, …

மேலும் படிக்க

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார்.  இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் …

மேலும் படிக்க

பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப்: இந்திய வீராங்கனை அதிதி அசோக் வரலாற்று சாதனை

இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் நகரில் லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அதிதி அசோக் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம், லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் பெறும் முதல் இந்திய வீராங்கனையாகிறார் அதிதி அசோக். பெங்களூரை சேர்ந்த இவர் …

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …

மேலும் படிக்க

லலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்

லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. …

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து …

மேலும் படிக்க

253 கோல்களுடன் லா லீகாவில் மெஸ்ஸி புதிய சாதனை

ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் லா லீகா (பிரதான லீக்) கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்கு பார்ஸிலோனா கிளப்பைச் சேர்ந்த ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸ்ஸி சொந்தக்காரராகியுள்ளார். செவில் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்டப் போட்டியில் லயனல் மெஸ்ஸி போட்ட 3 கோல்களின் உதவியுடன் பார்ஸிலோனா 5 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் லா லீகா கால்பந்தாட்டப் போட்டிகளில் தனது …

மேலும் படிக்க