Tag Archives: விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி முதலிடம் பிடித்தது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இந்திய அணிக்கு முதலிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை–இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு …

மேலும் படிக்க

இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கருணாநிதி பாராட்டு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு …

மேலும் படிக்க

உலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது …

மேலும் படிக்க

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

கொல்கத்தாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பு கோலால் சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்தது. 8 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் …

மேலும் படிக்க

டெண்டுல்கர் புகார், கிரேக் சேப்பல் மறுப்பு

ராகுல் திராவிடுக்கு பதிலாகத் தன்னை கேப்டனாக இருக்குமாறு 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டார் என்று டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார். “பிளேயிங் இட் மை வே’ என்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் குறித்து அதில் …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை

அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …

மேலும் படிக்க

மேற்கு இந்திய தீவுகளுடன் இனிவரும் ஆட்டங்களை நிறுத்த பிசிசிஐ முடிவு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று …

மேலும் படிக்க

வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய வீராங்கனை சரிதா

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா தேவி, அதனை கழுத்தில் அணிந்து கொள்ள மறுத்துவிட்டார். மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்குடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஆக்ரோஷமாக செயல்பட்ட சரிதா தேவி தனது அதிரடி …

மேலும் படிக்க

டென்னிஸ் மற்றும் வட்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10-வது நாளில், இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன. டென்னிஸ் ஆட்டத்தின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா புணியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜெய்ஷா, மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் நவீன் …

மேலும் படிக்க

வில்வித்தை மற்றும் ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்றது

இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இன்று நடந்த காம்பவுண்டு பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி வலிமையான தென் கொரியாவை 227-225 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, முடிவில் 227-225 என்ற புள்ளிக்கணக்கில் தென் …

மேலும் படிக்க