சென்னை H6 ஆர். கே. நகர் காவல் நிலையம் சார்பாக, காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில், சென்னையில் இன்று முதல் 12 நாட்கள் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கில் மக்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பகுதி வாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்
கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஒளிப்பதிவு: K. மகேஷ்குமார்
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K.. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி

