வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ் பி திரு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு ரோந்து படை ஆரம்பித்து சாலை விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு ரோந்து படை பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு இதுவரை 10% குறைவாகும். ஆனால் அதே நேரத்தில் சாலை விபத்துகள் கடந்த ஆண்டு விட ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எஸ்.பி. திரு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி