தென்காசி மாவட்டம் குனராமநல்லூர் ஊராட்சி மத்தாளம் பாறை கிராமத்தில் அம்பாசமுத்திரம் தென்காசி மெயின் ரோட்டில் பஸ் நிழல் குடை அருகில் பெட்டிக்கடை வைத்தும் கோழிக்கூடு போன்ற சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் உள்ளது
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் பேருந்து நிழற் கூடை கூட இருப்பது தெரியாமல் அரசு பேருந்து நிற்காமல் செல்வதும் பொது மக்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது
ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் ஆக்கிரமிப்பு அகற்றி தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றார்கள்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி


