பகுதி நேர பொறியியல் படிப்பு: மார்ச்-19 முதல் விண்ணப்பம் விநியோகம்

2014–15ம் கல்வி ஆண்டுக்கான பகுதி நேர பி.இ. மற்றும் பி.டெக். படிக்க விண்ணப்பம் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவங்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மதுரை தியாகராயர் என்ஜினீயரிங் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, பர்கூர், சேலம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 கல்லூரிகளில் கிடைக்கும்.

மாணவர்களூக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், பகுதிநேர பி.இ./ பி.டெக். மாணவர் சேர்க்கை, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை 641014 என்ற முகவரிக்கு ஏப்ரல் 7–ம் தேதிக்குள் வந்தடையும்படி அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *