ராணிப்பேட்டையில் போதை தடுப்பு விழிப்புணர்வு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் 1.2.2024, வியாழக்கிழமை நண்பகல் 2.30 மணியளவில், அரக்கோணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் திரு. மான்மல் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மதுவிலக்கு தடுப்பு ஆய்வாளர் திருமதி லதா அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட துணை தலைவர்கள் திரு. R. வெங்கட்டராமணன், திரு. K.R. சிவசுப்பிரமணிய ராஜா, திரு. D. கமலக்கண்ணன், திரு. பா.சீனிவாசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

தென்காசி மாவட்ட ஆட்சியர்: விவசாயத்துக்கு முழு ஆதரவு

Post Views: 4