ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதயமானது

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக ஆர்வலருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA , அவர்களது பரிந்துரையின் பேரில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது.

இதனையொட்டி நடைபெற்ற எளிய நிகழ்வில், திரு. மணிலால் அவர்களது முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில்

ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக தேர்வான திரு. மன்மால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நமது சங்கத்திற்கான அடையாள படிவத்தில் கையெழுத்திட்டார்.

இவருடன் அம் மாவட்டத்தை சேர்ந்த திரு. வெங்கட்ராமன், திரு. குணசீலன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌ என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறன்றோம்.

இந் நிகழ்வின்போது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் ஆகியோர் கலந்செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்”K.சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …