வாக்களிப்பதற்காக வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அலுவல் நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி