தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் இராயபுரம், ரம்ஜான் மஹாலில் 11-06-19 மாலை 7 மணியளவில் “இதயங்கள் இணையும் விழா” மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை “நண்பன்” திரு. எம். அபுபக்கர் நிகழ்த்த வரவேற்புரை பாடல் சிவஸ்ரீ. ஆனந்த சுவாமிகள் பாட நிகழ்ச்சி தொடங்கியது.
சிறப்பு அழைப்பாளர்களாக “செவாலியே” கலைமாமணி திரு. வி.ஜி.சந்தோசம், திரு. டி.எம்.எச் ஹாரூன், மாநில தலைவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி, Rev.Y. கமல்ராஜ், பொதுச்செயலாளர், கிறிஸ்துவ பாதுகாப்பு இயக்கம், திரு. S.A.N.வசீகரன், தமிழக தலைவர், ஆம் ஆத்மி கட்சி, MJF Ln Dr லி. பரமேஸ்வரன் , மாநில ஒருங்கிணைப்பாளர், டி.யூ.ஜெ. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் ” செயல் சிங்கம்” Ln C. பாலகிருஷ்ணன், மாநில, மாவட்ட, இளைஞர் அணி நிர்வாகிகள்,மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி