அமுரா

சென்னை மெட்ரோ ரெயில் 40 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம்

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் சுமார் ரூ.14,500 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு …

மேலும் படிக்க

உயர் சிகிச்சைபெற சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, இன்னும் ஒரு சில வாரங்களில் நாட்களில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பார் எனத் தகவல்

சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால் புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு அதனை ஏழை–எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். உயர் சிகிச்சை பெறமுடியாமல் உயிர் இழக்கும் ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் …

மேலும் படிக்க

இடைக்கால ரெயில்வே பட்ஜெட் தாக்கல்,தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்தார். மக்களவையில் கடும் அமளிக்கிடையே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நடப்பு நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட்டை மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ரயில்வேயின் பங்கு அளப்பரியதாகும் என்று குறிப்பிட்டார். 2758 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலக்கைவிட …

மேலும் படிக்க

ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர அரசுக்கு சவால் ‘என்னை கைது செய்து பார்’:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, கட்டணம் செலுத்த மறுத்து வரும் மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள பல சோதனச் சாவடிகளை அடித்து, நொறுக்கி நாசம் செய்து வருகின்றனர். இது …

மேலும் படிக்க

64-வருட ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த படமாக சிலம்டாக் மில்லியனர்

கடந்த மாதம் 64-வதுஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள படங்களில் சிறந்த படம் எது என்பது குறித்த ஏபிசி இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஓட்டெடுப்பின் முதல் ரவுண்டில் இந்திய படமான சிலம்டாக் மில்லியனர் முதல் இடத்தை பிடித்து  வருகிற 9 ந்தேதி  நடைபெறும் 2-வது கட்ட ஓட்டெடுப்புக்கு செல்கிறது. ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த …

மேலும் படிக்க

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ் மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை படைத்துள்ளார். இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஷ் மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ …

மேலும் படிக்க

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

இனிமேல் செல்போன் பேசியபடி வாகனம்  ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க