அரசியல்

இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மாறாக ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். குஜராத்தின் ராஜ்கோட் அருகே ஜஸ்டான் மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் கடந்த வருடம் …

மேலும் படிக்க

​இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை என்பது பீகார் தேர்தல் மூலம் நிரூபனம்: ஜவாஹிருல்லா

இந்தியாவில் மதவெறிக்கும், வெறுப்புணர்விற்கும் இடமில்லை என்பதை பீகார் மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் நிரூபித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ஊடகத்துறை, விமானத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை கொண்டுவரும் மத்திய அரசின் முடிவு ஆபத்தானது என கூறினார்.  நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் …

மேலும் படிக்க

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு …

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …

மேலும் படிக்க

முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான  அமிதாப் தாக்குருக்கும் மாநில அரசுக்கும்  இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய அமிதாப் தாக்கூர், தனக்கும் முலாயம் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ ஒன்றை வெளியிட்டு …

மேலும் படிக்க

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், உதகை படகு இல்லம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு விரைவில் …

மேலும் படிக்க

தேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்

தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார்.  இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …

மேலும் படிக்க

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …

மேலும் படிக்க

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது எனவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை …

மேலும் படிக்க